டீக்கடையில் மது விற்பனை செய்த பெண் கைது

நித்திரவிளை அருகே டீ கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-25 15:01 GMT

மதுவிற்றவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே தெருவுமுக்கு பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குமரி மாவட்ட தனிப்படை எஸ் ஐ இம்மானுவேல் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது லதா என்பவரின் டீக்கடையில் சோதனை நடத்திய போது, அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 குவார்ட்டர் பாட்டில்கள் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தனிப்படை போலீசார் மதுபானத்தையும் விற்பனையாளர் லதாவையும் நித்திரவிளை போலீசில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News