போத்தனூர் அருகே கணவனுடன் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு

போத்தனூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-09 16:45 GMT

கோப்பு படம் 

கோவை போத்தனூர் ஈஸ்வர் நகர் கணியப்ப கோனார் வீதியைச் சேர்ந்த சித்தநாதன் மனைவி வசந்தகுமாரி(48). சம்பவத்தன்று செட்டிபாளையத்தில் உள்ள கணவரின் சலூன் கடைக்கு சென்றவர் பின்னர் கணவனுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளனர்.

அப்போது ஈஸ்வர நகர் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் வசந்தகுமாரியின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பிச் சென்றுள்ளார்.வசந்தகுமாரி கூச்சலிட அருகில் இருந்தவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயன்ற நிலையில் அவர் லாவகமாக தப்பி சென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சுந்தராபுரம் போலீசார் செயின் பிறப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News