அரியலூரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
அரியலூரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-22 11:40 GMT
ரயில் கேட்
அரியலூர் AS மருத்துவமனை தெருவை சேர்ந்த ரத்தினகுமார் என்பவரின் மகன் கலைவாணன். இவர் தனது வீட்டில் சண்டையிட்டு கோபித்து கொண்டு வீட்டை விட்டு சம்பவதன்று வெளியேறி உள்ளார்.
இந்நிலையில் அரியலூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு உயிர் இழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே கோட்டபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறுதலாக ரயிலில் அடிப்பட்டரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.