விக்கிரவாண்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
Update: 2023-11-22 06:44 GMT
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போலீஸ் ஏட்டுகள் வேல்முருகன், இளவரசன், பிரகாஷ் ஆகியோர் நேற்று இரவு விக்கிரவாண்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர், அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்த போது, அவர் தப்பிச்செல்ல முயன்றார். உடனே, அவரை போலீசார் விரட்டி பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி. மேலக்கொந்தையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் மதன்குமார் (22) என்பதும், கடந்த 11-ந்தேதி மொபட்டில் வந்த பெண்ணை வழிமறித்து, அவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பதும், அவர் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது, இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 3 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.