நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வாலிபர் கைது

விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்ற வாலிபர் கைது. மேலும் அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-17 07:35 GMT

நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வாலிபர் கைது

உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை 5:00 மணியளவில் எறையூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில், எறையூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் கிளி என்கிற கில்பர்ட், 24; எனவும், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்றதும் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கிளியை கைது செய்து, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News