பயிலும் பள்ளியிலேயே ஆதார்பதிவு திட்டம் தொடக்கம்

அரியலூர் மாவட்டத்தில்பயிலும் பள்ளியிலேயே ஆதார்பதிவை டிஆர்ஓ தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-23 15:05 GMT

ஆதார் பதிவை தொடங்கி வைத்த அதிகாரி

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்டம் அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைபள்ளியில் இன்று தொடங்கபட்டது.

இதனை மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தொடங்கி வைத்தார். பின்னர் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே இத்திட்டம் கட்டணமின்றி தொடங்கபட்டு உள்ளதால், ஆதார் அட்டையில் திருத்தல் செய்தல் உள்ளிட்டவைகளுக்காக ஆதார் சேவை மையம், இ- சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை தவிர்க்கபடுகிறது என்று கூறினார்.

மேலும் இத்திட்டம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம பள்ளிகளிலும் நடைபெற உள்ளதாகவும், இதற்கான விபரங்கள் விரைவில் தெரிவிக்கபடும் என கூறினார். இதில் பள்ளிகல்வி துறை அதிகாரிகள், அப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News