ஆத்தூர் வாக்குச்சாவடியில் பரபரப்பு

ஆத்தூர் சிஎஸ்ஐ துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஆண்கள் பெண்கள் ஒரே நேரத்தில் அறைக்குள் புகுந்ததால் 15 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.

Update: 2024-04-19 12:46 GMT
ஆத்தூர் சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடி மையங்கள் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆத்தூர் கடைவீதி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ துவக்கப்பள்ளியில் 180 என் கொண்ட அறையில் வாக்காளர்கள் ஆண்கள் பெண்கள் என இரண்டு வரிசையிலும் ஒரே நேரத்தில் உள்ளே புகுந்ததால் தேர்தல் பணியாளர்கள் கட்டுப்படுத்த முடியாமல் தேர்தல் பணியாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சுமார் 15 நிமிடத்திற்கு மேல் வாக்குப்பதிவு நிறுத்தி வைத்து வாக்காளர்கள் வரிசையை சரி செய்த பின்னரே மீண்டும் வாக்குப்பதிவு சிறிது நேரம் சலசலப்புக்கு பின் துவங்கியது.
Tags:    

Similar News