மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட வயிற்று வலி- வாலிபர் தூக்கிட்டு தற்கொலை !
மதுப்பழக்கத்தால் அடிக்கடி ஏற்பட்ட வயிற்று வலியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-18 11:10 GMT
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மதுப்பழக்கத்தால் அடிக்கடி ஏற்பட்ட வயிற்று வலியால், தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பழைய ஜெயங்கொண்டம் எம்ஜிஆர் நகர், வடக்கு கொடி தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் பாரதிதாசன் வயது 43. இவருக்கு அண்மை காலமாக மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால், அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியில் வாழ்ந்து வந்த பாரதிதாசன், மார்ச் 17ஆம் தேதி மாலை 4 மணியளவில், பழைய ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி ரேவதி வயது 35 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பாரதிதாசன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லாலாபேட்டை காவல் துறையினர்.