குற்ற வழக்கில் ஆஜராகாத இளைஞர்: சிறையில் அடைத்த காவல்துறையினர்

கரூரில் குற்ற வழக்கில் ஆஜராகாத இளைஞரை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Update: 2024-05-26 13:51 GMT
குற்ற வழக்கில் ஆஜராகாத இளைஞரை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்த காவல்துறையினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர், ஃபர்ஸ்ட் கிராஸ் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் கதிரேசன் வயது 25. இவர் மீது கரூர் மாநகர காவல் நிலையம், தாந்தோணி மலை காவல் நிலையம், பசுபதிபாளையம் காவல் நிலையங்களில் 11 குற்ற வழக்குகள் உள்ளது. இதில் மூன்று வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் ஏமாற்றி வந்ததால், நீதிமன்றம் காவல்துறையினருக்கு பிறப்பித்த உத்தரவுப்படி, தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு தொடர்பான நீதிமன்ற பணிகளை மேற்கொண்டு வரும் தலைமை காவலர் ராஜசேகரன், நேற்று கதிரேசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Tags:    

Similar News