வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

Update: 2024-01-26 03:13 GMT

உறுதிமொழி ஏற்பு 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வாசிக்க, அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். வருடந்தோறும் ஜனவரி 25 அன்று இந்திய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படும். இந்த வருடம் அரசு விடுமுறையாக இருப்பதால் ஜனவரி 24ஆம் தேதி காலை 11 மணியளவில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அதனை தொடர்ந்து அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, தேர்தல் வட்டாட்சியர் அருளானந்தம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News