பசுமை நிறைந்த நினைவுகளோடு பணி நிறைவு பெற்ற கல்வி அலுவலர்

கரூர் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி தனது பணி நிறைவு நாள் விழாவில் "பசுமை நிறைந்த நினைவுகளே" பாடலை பாடி தனது பணிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

Update: 2024-07-01 05:46 GMT

கரூர் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றிய சுமதிக்கு நேற்று  பணி நிறைவு நாள் விழா, கரூர் அடுத்த தாந்தோணிமலை பகுதியில் செயல்படும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், உயர்நிலை, மேல்நிலை, பட்டதாரிகள் ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் மலைக் கொழுந்தன், தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, கரூர் மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி, தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி மற்றும் தலைமை ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பணி ஓய்வு பெற்ற சுமதிக்கு தங்கள் வாழ்த்துக்களையும், பணியாற்றிய காலத்தில் தங்கள் அனுபவங்களை விவரித்து நினைவு கூறினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் கல்வி அலுவலர் சுமதி, ரத்த திலகம் என்ற தமிழ் திரைப்படத்தில், கவிஞர் கண்ணதாசன் இயற்றி, கேவி மகாதேவன் இசையில் உருவான "பசுமை நிறைந்த நினைவுகளே" பாடலை பாடி தனது நினைவுகளை பதிவு செய்தார் சுமதி. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கரவொலி எழுப்பி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News