குவிந்த பட்டாசு கழிவுகள் - அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள்

Update: 2023-11-13 08:22 GMT

குப்பைகள் அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலியிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து இனிப்புகளை பரிமாறி உற்சாகமாக கொண்டாடினர். தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அதே வேளை பட்டாசு வெடித்ததன் காரணமாக திருநெல்வேலி மாநகரத்தின் பல்வேறு பிரதான வீதிகள் பட்டாசு கழிவுகள் மற்றும் குப்பைகள் நிறைந்து காட்சியளிக்கிறது. திருநெல்வேலி டவுன் பகுதியில் பிரதான வீதிகளில் வீட்டின் முன்பு குவியல் குவியலாக பட்டாசு கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறது.அதேபோன்று வீதிகள் முழுமைக்கும் பட்டாசு கழிவுகள் நிறைந்து காட்சியளிக்கிறது. மாநகராட்சியின் ஒட்டுமொத்த பகுதிகளும் டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பட்டாசு கழிவுகளையும் குப்பைகளையும் அப்புறப்படுத்தும் கடினமான பணியில் திருநெல்வேலி மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி ஒருபுறம் நடைபெற்று வரும் அதே வேளையில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் காற்று மாசு இயல்பை விட அதிகரித்து காணப்படுகிறது.

Tags:    

Similar News