10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து சாதனை

நத்தம் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Update: 2024-03-04 05:28 GMT

போலியோ சொட்டு மருந்து முகாம்

நத்தம் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் இதில் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் நத்தம் ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சிகளில் உள்ள 105 மையங்களில் இந்த முகாம் நடந்தது. இவற்றை மாவட்ட பூச்சியியல் வல்லுநர் தெய்வேந்திரன் மேற்பார்வையிட்டார்.
Tags:    

Similar News