செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிரடி சோதனை

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிரடி சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Update: 2024-06-23 11:09 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம்

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் மற்றும் சூனாம்பேடு காவல் நிலையங்களுக்கு எல்லைக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை கடலோரப் பகுதிகள் உள்ள முந்திரி காடுகள்,தோப்புக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று குழுக்களாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை ஈடுபட்டனர்.

மேலும் கள்ள சந்தையில் மதுவிற்பவர் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.. புதுச்சேரியில் இருந்து ஈசூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் மூன்று மூட்டைகளில் புதுச்சேரி மதுபானம் கடத்திய வந்த வாகனத்தை மடக்கி சூனாம்பேடு போலீசார் மடக்கி சோதனை செய்துள்ளனர்.

அப்போது ஈசூர் பகுதியை சேர்ந்த விஜி என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரது மனைவி பொன்மணியை கைது செய்து அவர்கள் கடத்திய 546 புதுச்சேரி மதுபாட்டுகளைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News