கீரனூரில் அரசு பெண்கள் பள்ளியில் ரூ.1.4 கோடியில் கூடுதல் கட்டிடம்
கீரனூரில் அரசு பெண்கள் பள்ளியில் ரூபாய் 1.4 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-10 11:25 GMT
கீரனுார் அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் இப்போது 33 வகுப்பறைகள் உள்ள நிலையில், கூடுதலாக 7 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டுவதற்கு நபார்டு திட்டத்தின் மூலம் ரூ. ஒரு கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எம்எல்ஏ சின்னத்துரை அடிக்கல் நாட்டினார்.
புதிய கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தில் சைக் கிள் நிறுத்துமிடம் மற்றும் கழிப்பிடங்கள் இருந்தன. இந்த கழிப்பிட கட்டடத்தை இடித்துவிட்டு வாகன நிறுத்துமிடம், கழிப்பிடம் மற்றும் வகுப் பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. புதிய கட்டடத்தில் முதல் தளத்தில் 2 வகுப்பறையுடன் கூடிய 5 கழிப்பி டங்களும்,
இரண்டாம் தளத்தில் 2 வகுப்பறை களுடன் கூடிய 5 கழிப்பிடங்களும் கட்டப்பட வுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.