மாணவர்களிடம் உரையாற்றிய ஜோதிமணி எம்.பி

ஆண்டிப்பட்டி கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் உரையாற்றிய கரூர் எம்.பி. ஜோதிமணி.

Update: 2023-10-26 08:10 GMT

ஜோதிமணி எம்.பி உரையாடல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாணாக்கர்களை நேரில் சந்தித்து உரையாற்றினார். அப்போது தேர்வினால் ஏற்படும் பயத்தை மாணாக்கர்கள் பொறுப்பெடுத்த கூடாது. எப்போதும், எந்த பிரச்சனைகளை கண்டாலும் அதை எதிர்கொள்ளும் திறனோடு நாம் எதிர்கொண்டால் எந்த பிரச்சனைகளும் நம்மை பாதிக்காது என்று மாணாக்கர்களுக்கு விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளராக திருவேங்கடம், கிராம காங்கிரஸ் தலைவர் சௌந்தரராஜன், அரவக்குறிச்சியை மதிமுக ஒன்றிய செயலாளர் பூபதி, பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணி மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News