தேப்பெருமாநல்லூரில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

தேப்பெருமாநல்லூரில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-06 17:30 GMT

விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா தேப்பெருமாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி பள்ளி மேலாண்மை குழு தலைவர் வழக்கறிஞர் குமரவேல்தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒன்றிய கவுன்சிலர் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News