அதிமுக நிர்வாகியிடம் ரூ. 3 லட்சம் பறிமுதல்

ஏழுமலை அருகே அதிமுக நிர்வாகியிடம் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-19 09:41 GMT

ஏழுமலை அருகே அதிமுக நிர்வாகியிடம் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிமுக நிர்வாகியிடம் பணம் பறிமுதல் திருமங்கலம் மதுரை மாவட்டம் எழுமலை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக கொடி பொருத்தி வந்த காரில் வந்த காராம்பட்டி கிளைச் செயலாளர் கிருபாகரன் என்பவர் காரை சோதனை செய்தபோது உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.3 லட்சம் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் வரும் வாகனங்கள் தீவிரமாக பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News