சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் அதிமுக., எடப்பாடி பழனிச்சாமி

சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் கட்சியாக அதிமுக விளங்குகிறது என, கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Update: 2024-01-23 08:50 GMT

 சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் கட்சியாக அதிமுக விளங்குகிறது என, கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். 

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாற்றுக் கட்சியினர் அதிமுக வில் இணையும் நிகழ்ச்சி நேற்று மாலை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் ஏராளமானவர்கள்  இணைந்தனர்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அதிமுகவினர் மீது பாசம் வைத்திருப்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளில்  பங்கேற்க குமரி மாவட்டம் வந்துள்ளேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைகளை  தீர்த்து வைப்பது அதிமுக தான். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லை. நாம்தான் அவர்களின் வாரிசாக விளங்குகிறோம். சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் கட்சியாக அதிமுக விளங்குகிறது.  அதிமுக ஆட்சியில் சாதி மத சண்டை கிடையாது. அமைதி பூங்காவாக தமிழகம் விளங்கியது. என்று அவர் கூறினார்.        

இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News