அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

விழுப்புரத்தில் அ.தி.மு.க. தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது.

Update: 2023-12-14 09:38 GMT

விழுப்புரத்தில் அ.தி.மு.க. தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரம் நகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட வடக்கு தெருவில் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகரமன்ற கவுன்சிலர் வக்கீல் ராதிகா செந்தில் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், இக்கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் செங்குட்டுவன், பேரவை பொருளாளர் ரகுநாதன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மண்டல தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், நகர அவைத்தலைவர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் பாக்கியலட்சுமி, சிவன், முன்னாள் அரசு வக்கீல் சுபாஷ், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் வரதன், அபிராமன், பாலசுப்பிரமணியம், வெங்கடபதி, ராஜ்குமார், வார்டு நிர்வாகிகள் கீதாரத்தினம், ஹைதர்ஷெரீப், லியாகத்அலி, தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News