43 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

கும்பக்கரை அருவி

Update: 2023-12-16 05:30 GMT

கும்பக்கரை அருவி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால் நவம்பர் மூன்றாம் தேதி முதல் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் தொடர்ந்து பெய்த வட கிழக்கு பருவமழை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் நீரின் அளவு குறைந்து சீராகாத நிலையில் நேற்று வரை 43 நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நீர் வரத்து குறைந்து சீராக உள்ள நிலையில் இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். இதனிடையே சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதல் ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் கும்பக்கரை அருவி நீரில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
Tags:    

Similar News