அகத்தியர் மூலகை வனம்- பணி அனுபவம் பெற்ற கல்லூரி மாணவிகள்
பட்டுக்கோட்டை அகத்தியர் மூலகை வனத்தில் கல்லூரி மாணவிகள் பணி அனுபவம் பெற்றனர்.;
Update: 2024-05-23 02:27 GMT
பட்டுக்கோட்டை அகத்தியர் மூலகை வனத்தில் கல்லூரி மாணவிகள் பணி அனுபவம் பெற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் , ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனொரு பகுதியாக பட்டுக்கோட்டை அருகே உள்ள பசும்பொன்நகர், சிவக்கொல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ அகத்தியர் மூலிகை வனத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பணியில் ஈடுபட்டனர். அங்கு வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, வெள்ளரி, பாகற்காய் மற்றும் கீரைகள் போன்றவற்றின் விதைகளை அவரின் வயலில் விதைத்தும், அங்குள்ள செவ்வாழை, பச்சைநாடன், மொந்தன் போன்ற வாழை இனங்களில் களையெடுத்தும் களப்பயிற்சியில் ஈடுபட்டு பணி அனுபவம் பெற்றனர்.