ஆம்பூர் பட்டி கோயிலில் அக்னி பால்குட விழா!

ஆம்பூர் பட்டியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பால்குட விழா நடந்தது.

Update: 2024-05-01 14:51 GMT

ஆம்பூர் பட்டியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பால்குட விழா நடந்தது.


விராலிமலை ஒன்றியம் வடுகப்பட்டி முத்துமாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வடுகப்பட்டி ரத்னா கார்டன் தேத்தம்பட்டி மேல நாக மங்கலம் உள்பட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் மற்றும் மாவிளக்கு இட்டும் கிடாவெட்டியும் வழிபட்டனர் கிராமிய நாடகம் நடந்தது.

ஆம்பூர் பட்டியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 21ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை பக்தர்கள் கோயிலில் அருகே உள்ள ஊரணியில் இருந்து பால்குடம் அக்னி சட்டி எடுத்தும் அழகு குத்தியும் குழந்தைகளை கரும்பு தொட்டியில் தூக்கியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் கோயில் முன்பு கிடா வெட்டு பூஜை நடந்தது. இரவு முன்பு பூரண நாடகம் நடந்தது. நேற்று காலை கரகம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் விழா நிறைவடைந்தது.

Tags:    

Similar News