அனக்காவூர் கிராமத்தில் வேளாண் கண்காட்சி
செய்யாறு அடுத்த அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-26 15:36 GMT
வேளாண் கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் கிராமத்தில் ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகள் வேளாண் கண்காட்சி ஒன்றை அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடத்தினர். இதில் அனக்காவூர் ஊராட்சி மன்றத் தலைவர் கனிமொழி மோகன், திருநாவுக்கரசு மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.