வேளாண்மை பணி அனுபவ திட்டம் துவக்க விழா

Update: 2023-12-29 07:32 GMT
வேளாண்மை பணி அனுபவ திட்டம் துவக்க விழா
செங்கல்பட்டு மாவட்டம், மொறப்பாக்கம் சமுதாய கூடத்தில், தேசிய விவசாய தினம் மற்றும் வேளாண்மை பணி அனுபவ திட்டம் துவக்க விழா ஊராட்சி மன்ற தலைவர் வசந்திகங்காதரன், கிராம நிர்வாக அலுவலர் தேவேந்திரன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் இயற்கை விவசாயம் குறித்தும் வேளாண்மை பணிகளை எவ்வாறு மேற்கொள்வது குறித்து வேலு, கன்னியப்பன் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் மாலதி, எஸ் ஆர் எம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் பெபிஷா, மஞ்சுளா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News