செய்யாறு நகர்மன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

செய்யாறில் திமுக நகர மன்ற தலைவரை கண்டித்து அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

Update: 2024-01-12 09:03 GMT

வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள்

 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் திருவத்திபுரம் நகராட்சியில் நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் எந்த ஒரு திட்டப் பணிகளும் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் திமுக நகர மன்ற தலைவரை கண்டித்து அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் திமுக நகர மன்ற தலைவராக மோகனவேல் தலைமையில் நகர மன்ற கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெறும் என்று நகர மன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்திருந்த நிலையில் ஒரு மணி நேரம் ஆகியும் நகர மன்ற கூட்டம் நடைபெறவில்லை நகர மன்ற கூட்டத்தில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் நீண்ட நேரம் காத்திருந்த பின்னர் கோபமடைந்த அதிமுக வார்டு உறுப்பினர்கள் நகராட்சி ஆணையாளர் அறைக்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு ) குமரன் அதிமுக வார்டு உறுப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது அதிமுக நகர மன்ற உறுப்பினர் கேள்வி கேட்டதற்கு நகராட்சி ஆணையாளர் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று பாசாங்கு காட்டினார் இதையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக திமுக நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமையில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

அப்போது 19 வது வார்டு அதிமுக நகர மன்ற உறுப்பினர் வெங்கடேசன் எழுந்து கேள்வி எழுப்பினார் அப்போது பேசிய அதிமுக நகர மன்ற உறுப்பினர் வெங்கடேசன் 11 மணிக்கு நடைபெற வேண்டிய நகர மன்ற கூட்டம் ஒரு மணி நேரமாக தாமதமாக நடைபெறுகிறது நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அதே போல் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் எந்த ஒரு திட்டப் பணிகளும் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் திமுக நகர மன்ற தலைவர் மோகனவேல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும்,

எந்த ஒரு பணிகளும் சரியான முறை செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார் இதற்கு திமுக நகர மன்ற தலைவர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை.

இந்த நிலையில் அதிமுக உறுப்பினர்களுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் திமுக நகர மன்றம் தலைவர் மோகனவேல் தன்னிச்சையாக செயல்படுவதை கண்டித்து 19 வது வார்டு அதிமுக நகர மன்ற உறுப்பினர் வெங்கடேசன், 8வது வார்டு அதிமுக நகர மன்ற உறுப்பினர் மலர் பெருமாள், 10வது வார்டு அதிமுக நகர மன்ற உறுப்பினர் நித்திய பிரகாஷ் ஆகிய அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் திமுக நகர மன்ற தலைவர் மோகனவேல் எந்த ஒரு திட்டப் பணிகளும் சரியான முறையில் செய்யவில்லை எனவும்,

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி முழுவதும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் சரியான முறையில் செய்யவில்லை என்று திமுக நகர மன்ற உறுப்பினர்களே நகர மன்ற கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News