திருப்பூர் : எம்ஜிஆரின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் – அதிமுகவினர் மரியாதை

திருப்பூரில் எம்ஜிஆரின் 36-வது ஆண்டு நினைவுகளாக ஏற்றி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

Update: 2023-12-25 02:05 GMT

அதிமுகவினர் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் அவைதலைவர் பழனிச்சாமி, கே.என். விஜயகுமார் எம்எல்ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.கள் சு.குணசேகரன், என்.எஸ்.என் நடராஜன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் கண்ணப்பன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அம்மா பேரவை துணைச்செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் நல்லூர் பகுதி கழகம் சார்பில் பகுதி செயலாளர் குமார் தலைமையில் ராக்கியாபாளையம் பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் கலந்து கொண்டு எம்ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News