லால்குடி அருகே திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி பேராட்டம்

திருச்சி மாவட்டம்பூவாளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வரும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-12 10:51 GMT

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் 

திருச்சி மாவட்டம் லால்குடி கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னால் எம்பியுமான ப.குமார் வழிகாட்டுதல்படி தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வருவதையும்,

போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ள திமுக அரசை கண்டித்து 12 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக லால்குடி ஒன்றியம் சார்பில் பூவாளூர் பேரூராட்சி அலுவலம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் லால்குடி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மாவட்ட,ஒன்றிய,நகர,பகுதி,கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News