ஏஐடியுசி 104 ஆவது அமைப்பு தினம்

ஏஐடியுசி 104 ஆவது அமைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-11-01 14:01 GMT

அமைப்பு தினம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தொழிற்சங்கமான ஏஐடியுசி அமைப்பு தினத்தை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 50 இடங்களில் கொடியேற்றப்பட்டது. தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "மக்களுக்கு சேவை செய்யும் பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்போம். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக துணை நிற்போம்" என உறுதிமொழி எடுக்கப்பட்டது.  தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சேவையா தலைமை வகித்தார். தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் அமைப்பு நாள் கொடியை ஏற்றி பேசினார். மாவட்ட செயலாளர் மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், தெரு வியாபார சங்கம் மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் அப்பாத்துரை, அரசு போக்குவரத்து சங்க கௌரவ தலைவர் சுந்தர பாண்டியன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், தலைவர் பால வடிவேல் கலந்து கொண்டனர். கும்பகோணம் சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அம்மாபேட்டையில் நடைபெற்ற விழாவுக்கு பட்டு கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் சுந்தர்ராமன் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News