ஆலங்குடி : பைக் விபத்தில் வாலிபர் பலி - கண்கள் தானம்
Update: 2023-12-10 01:22 GMT
ஆலங்குடி காவல் நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ் (27). இவர் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் வாங்குவதற்காக பைக்கில் ஆலங்குடி சென்றார். ஆலங்குடி சம்பட்டிவிடுதி சாலையில் சென்றபோது, அந்த வழியாக புதுக்கோட்டை ஆசாரி காலனியை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சதீஷ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சதீஷின் கண்கள் தானம் செய்யப்பட்டன.