அகில இந்திய ஓய்வூதியர் நல சங்கத்தினர் போராட்டம்

மயிலாடுதுறையில் இபிஎஸ் 95 - அகில இந்திய ஓய்வூதியர் நல சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-06 02:09 GMT

ஆர்ப்பாட்டம் 

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் இபிஎஸ் 95 - அகில இந்திய ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து குறைந்தபட்ச பென்ஷன் தொகையாக 9 ஆயிரம் ரூபாய் பஞ்சபடியுடன் வழங்கிட வேண்டும் , அனைவருக்கும் இ எஸ் ஐ மருத்துவ காப்பீடு வசதி வழங்கி , மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில்வே கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிற்கு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சமூக பாதுகாப்புடன் கூடிய தனி பென்ஷன் வழங்க வேண்டும் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயில் ஓய்வூதியர்களின் துணைவியார்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசிற்கு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News