குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Update: 2023-12-05 02:26 GMT

குற்றால அருவி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் கடந்த இரு தினங்களாக குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, இன்று சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் பெய்த தொடா்மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து நள்ளிரவு முதல் ஐந்தருவியிலும், காலை முதல் பேரருவியிலும் தொடா்ந்து பழையகுற்றாலம் அருவியிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளும், ஐயப்பப் பக்தா்களும் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா்.
Tags:    

Similar News