எஸ்சி,எஸ்டி அலுவலர் நலச் சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் நலச் சங்கம் சார்பில் அவரது திருவுவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2024-04-15 05:26 GMT

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் நலச் சங்கம் சார்பாக நாமக்கல் பஸ் நிலையம் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் நலச் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் க.கண்ணன் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.மஞ்சுநாதன், நாகராஜன், சங்க ஆலோசகர் ஸ்ரீதர் , தங்கராசு, அண்ணாமலை, செல்வராஜ் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News