அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

சங்ககிரி அருகேயுள்ள தேவூரில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

Update: 2023-12-06 17:52 GMT

சங்ககிரி அருகேயுள்ள தேவூரில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூரில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார். சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் சந்தை பேட்டை பகுதியில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி சேலம் நாமக்கல் ஈரோடு மாவட்ட மண்டல அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயலாளர் பெருமாள் தலைமையில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். இதில் சங்ககிரி ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, விடுதலை சிறுத்தை கட்சி தேவூர் 9வது வார்டு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கம் பொருப்பாளார்கள், தேவூர் , அம்மாபாளையம் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News