சாத்தூர் அருகே ஆம்புலன்ஸ் - டிராக்டர் மோதல்: இருவர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆம்புலன்ஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் டிரைவர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-01-14 08:52 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆம்புலன்ஸ் டிராக்டர் மோதல் டிரைவர்கள் இருவர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிசத்திரம் விளக்கில் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இரண்டு வாகன ஓட்டுனர்கள் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னத்தம்பியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (48). இவர் என் வெங்கடேஸ்வராபுரத்தில் உள்ள தனியார் மில்லில் டிராக்டர் ஓட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனியார் மில்லின் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்னால் வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் கண்ணன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் வயது (35) என்பவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதும் அங்கிருந்து நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு பின்னர் மதுரை திரும்பி வந்து கொண்டிருந்ததாகவும் அப்பொழுது நள்ளிசத்திரம் அருகில் வரும் பொழுது ஆம்புலன்ஸ் திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News