பழமை வாய்ந்த ஆலமரம் வீட்டின் சுவர் மீது விழுந்து விபத்து !!
ஆத்தூர் அருகே பத்தாம் பாடி மாரியம்மன் கோவில் தெருவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆழமரம் வீட்டின் சுவர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.
Update: 2024-06-01 11:59 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொத்தம்பாடி தென்னங்குடி பாளையம் விநாயகபுரம் மஞ்சினி அம்மம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தலையில் கொத்தாம்பாடி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆழமரம் சூறைக்காற்று காரணமாக அருகாமையில் இருந்த வீட்டின் சுவர் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு தற்போது மரத்தை அகற்றும் பணியில் பொதுமக்கள் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.