விருதுநகரில் ஒரு மணி நேர கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2023-11-01 03:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகரில் சில நாட்களாகவே காலையில் வெயில் அடிப்பதும் மாலையில் மேகம் மூட்டமாக இருந்து வந்ததது. இந்த நிலையில் நேற்று மாலை விருதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் விருதுநகரில் மாலை கருமேகங்கள் சூழ்ந்து தீடீரென்று கனமழை பெய்தது. மேலும் விருதுநகர் நகர் பகுதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூலக்கரை, அல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் விருதுநகர் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News