சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி

மதுராந்தகம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அதிமுக ஊராட்சி தலைவரின் கார் மோதியதில் முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2024-01-18 01:40 GMT
பைல் படம் 
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அம்பேத்கர் சிலை அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்டயாம்மந்தல் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரம்.உறவினர் வீட்டுக்கு வந்து பின்னர் மதுராந்தகம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற பொழுது எண்டத்தூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த எல்.எண்டத்தூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின்  கார் முதியவர் பஞ்சாட்சரம் மீது மோதி விபத்துக்குள்ளானது,இந்த விபத்தில் பஞ்சாட்சரம் சம்பவ இடத்தில் பலியானார்.. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News