தூத்துக்குடி அருகே பீடி பற்றவைத்தபோது தீப்பற்றி முதியவர் பலி
தூத்துக்குடி அருகே பீடி பற்றவைத்தபோது ஆடையில் தீப்பற்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-23 15:47 GMT
கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகில் உள்ள சிவலூர் கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மாசாணம் (79). இவர் நேற்று கட்டிலில் படுத்தவாறு பீடியை பற்ற வைத்தாராம். அப்போது எதிர்பாராமல் அவரது சட்டையில் தீ பிடித்தது.
இதில் பலத்த தீக்காயம் அடை்நத அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ஜானகி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.