டூ வீலரை ஓட்டிச் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

டூ வீலரை ஓட்டிச் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-29 07:11 GMT

முதியவர் பலி

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேலாயுதம்பாளையம், வள்ளுவர் நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவாசன் வயது 66. இவர் ஜனவரி 25ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், வள்ளுவர் நகர் சாலையிலிருந்து- வேலாயுதம்பாளையம் பைபாஸ் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது,இவர் ஓட்டிச் சென்ற வாகனம், திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஸ்ரீநிவாசனுக்கு தலை, மற்றும் வலது, இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Advertisement

அங்கு சிகிச்சையில் இருந்து வந்த ஸ்ரீநிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீனிவாசனின் மகன் மணிகண்டன் இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ஸ்ரீனிவாசன் உடலை உடற்கூறு ஆய்வுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News