சாலையை கடக்க முடியாமல் தவித்த முதியவர்

போக்குவரத்து நெரிசல் நேரத்தில் சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் தடுமாறிய முதியவர். முதியவரின் கையைப் பிடித்து போக்குவரத்து காவலர் சாலையின் எதிர்புறத்தில் கொண்டு சென்று விட்டார்.

Update: 2024-02-22 06:09 GMT

சாலையை கடக்க முடியாமல் தவித்த முதியவர்

திண்டுக்கல் பேருந்து நிலையம் மீனாட்சி பவன் அருகே இன்று போக்குவரத்து நெரிசல் நேரத்தில் சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் தடுமாறிய ஊன்றுகோலுடன் ஒரு முதியவர் நின்று இருந்தார். முதியவரின் கையைப் பிடித்து அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் சங்கரநாராயணன் சாலையில் எதிர்புறத்தில் கொண்டு சென்று விட்டார். முதியவர் போக்குவரத்து காவலர் சங்கரநாராயணனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News