கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம், பூங்குணம் பகுதியில் கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-15 10:03 GMT
கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 85; நேற்று காலை கிணற்றில் குளிக்க செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். குளிக்கச் சென்று நீண்ட நேரம் வீடு திரும்பாததால், உறவினர்கள் வயல்வெளியில் சென்று பார்த்தபோது, மாசிலாமணியை காணவில்லை. ஆனால், அவர் அணிந்திருந்த துணிகள் மட்டும், மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே இருந்தது.

இதையடுத்து, உறவினர்கள் தீயணைப்புத்துறையினர் மற்றும் சித்தாமூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடியபோது, மாசிலாமணி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, சித்தாமூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News