வெள்ளக்கல்பட்டியில் அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வெள்ளக்கல்பட்டியில் 29 ந்தேதி நேற்று 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரை சடலமாக மீட்டனர்.

Update: 2024-03-01 10:37 GMT
அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வெள்ளக்கல்பட்டியில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக கிடப்பதாக புத்தானாம்பட்டி பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதனுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன் சம்பவ இடத்திற்கு சென்று சடலமாக கிடந்த முதியவர் குறித்து விசாரணை செய்தார்.

பின்னர் புலிவலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.தகவலறிந்த புலிவலம் போலீசார் சம்பவ இத்திற்க்கு விரைந்து சென்று சடலமாக கிடந்த முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புலிவலம் போலீசார் இறந்து போன முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News