வேப்பனகள்ளியில் ஸ்கூட்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பூசாரி பலி

வேப்பனகள்ளி ஸ்கூட்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பூசாரி உயிரிழந்தார்.

Update: 2024-06-17 12:28 GMT

காவல் நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராமப்பா (வயது 59). எர்ரப்பள்ளி முருகன் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.அவர் நேற்று மாலை வேப்பனப்பள்ளி - தீர்த்தம் சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முனிராமப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

Tags:    

Similar News