கீழப்பாவூர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் நடைபெற்ற ஆண்டாள் சுவாமிக்கு திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடை பிரசாதத்தை பெற்று கோண்டனர்

Update: 2024-01-04 15:26 GMT

ஆண்டாள் திருக்கல்யாணம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. கீழப்பாவூர் தமிழர்தெருவில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலில் மார்கழி மஹோத்ஸவ விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்று வைபவம், ஊஞ்சல் தொடர்ந்து ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து புதிய ஆடைகள் கொண்டு வந்து சுவாமிக்கு சமர்ப்பணம் செய்து, பின்னர் அதையே பிரசாதமாக பெற்றுக் கொண்டனர். ஏற்பாடுகளை ரவி பட்டாச் சாரி தலைமையில் விழா கமிட்டியார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News