அண்டம்பள்ளம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம்,அண்டம்பள்ளம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Update: 2023-12-04 04:35 GMT

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 1-ம் தேதி நடந்தது.இதில் 40-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் 14 ,17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவின் கீழ் பல்வேறு விதமான நீச்சல் போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 19 வயதுக்குட்பட் டோர் பிரிவில் பிரகாஷ் 50 மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோகில் முதலிடமும்,200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோகில் 2-ம் இடமும் பெற்றார்.

 கார்த்திகேயன் 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோகில் முதலிடமும்,400 மீட்டர் பிரீ ஸ்டைல் 2-ம் இடமும்,100 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோகில்3-ம் இடமும் பெற்றார். பாலாஜி 100 மீட்டர் பேக் ஸ்டோக் 3-ம் இடமும் மற்றும் 4 × 100 மீட்டர் பிரீ ஸ்டைல் ரிலேவில் மாணவர்கள் பிரகாஷ்,கார்த்திகேயன், தமிழரசன் மற்றும் மோகன செல்வம் ஆகியோர் 2-ம் இடமும் மற்றும் 14 வயதிற்குட்பட்ட 4 x 100 மீட்டர் பிரீ ஸ்டைல் ரிலேவில் மாணவர்கள் பத்ரி, பாலமுருகன், அஜய் மற்றும் அஜய் குமார் ஆகியோர் 2-ம் இடமும் பெற்றனர்.மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்த மாணவர்கள் அடுத்த மாதம் சென்னையில் நடை பெறும் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் பார்த்தசாரதி,பத்மா உடற்கல்வி ஆசிரியர் முத்துகிருஷ்ணன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் ஆகியோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News