அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கீழ்வேளூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

Update: 2024-02-06 02:55 GMT

ஆர்ப்பாட்டம் 

கீழ்வேளூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கீழ்வேளூர் வட்டார தலைவர் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் அனந்த நாயகி, மாவட்ட பொருளாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் .பணி நிரந்தர ஆணை வழங்கிட வேண்டும் .அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த ஆயுஷ்மான் பவ இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Tags:    

Similar News