கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம் திருவாடானை அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது

Update: 2023-12-14 11:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செங்கமடையில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு திருவாடானை கால்நடை மருத்துவர் சௌந்தர்யா கலந்து கொண்டு சுமார் 70க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினார். அதேபோல் பசு மற்றும் காளை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு, குடற்புழு நீக்கம், சிறு சிறு அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைக்  செய்யப்பட்டது. இதில் 70 ஆடுகளுக்கும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கும், 100க்கும் மேற்பட்ட கோழிகளுக்கு வெக்கை தடுப்பூசி போட்டனர். இநிகழ்வில் கிராம மக்கள் ஏராளமானோர் தங்களது வீடுகளில் வார்க்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றுச் சென்றன்.
Tags:    

Similar News