ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி அமைய அன்ன அபிஷேகம்

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கரூரில் அன்ன அபிஷேக பூஜை நடந்தது

Update: 2023-10-29 02:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள மிகப் பழமையான அருள்மிகு வஞ்சலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இன்று திருக்கோவிலில் மாலை அன்ன அபிஷேக விழா நடைபெற்றது. வஞ்சலீஸ்வரருக்கு அன்ன அபிஷேகம் அலங்கார சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் நிறுவனத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டி  அபிஷேகம் பூஜை நடத்தி சுமார் 2500 பேருக்கு ஐந்து வகையான சாதங்களும் இனிப்பும் பிரசாதமாக  அதிமுக ஓபிஎஸ் அணியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை ஏ.டி.பி. கணேசன், மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் கணேசன், மாவட்ட பிரதிநிதி அன்பரசன், மாவட்ட மாணவரணி செயலாளர் மாரியப்பன், கரூர் வடக்கு நகர செயலாளர் அன்பழகன், கரூர் மாநகர துணை செயலாளர் ஓம் சக்தி சேகர், தெற்கு நகர செயலாளர் கோபால், மகளிர் அணியினர் மற்றும் மாவட்ட, வட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News