கருங்கல் பேரூர் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம்

கருங்கல் பேரூர் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-02-03 08:12 GMT

 கருங்கல் பேரூர் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அண்ணா நினைவு தினம் முன்னிட்டு குமரி மாவட்டம் கருங்கல் பேரூர் திமுக சார்பில்  அண்ணா உருவ படத்துக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கருங்கல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.         கருங்கல் பேரூர் கழகச் செயலாளர் வ  அருள்ராஜ் தலைமை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக அமைத்தலைவர் மரியசிசுகுமார், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர்  ராஜன், மாவட்ட பொருளாளர்   ததேயு  பிரேம்குமார், மாநில சட்டத்துறை துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தினேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணி  தனிஸ்லாஸ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்  ஜூட் தேவ், மாவட்ட பிரதிநிதிகள் லலிதா குமார்,  எப்சி ராணி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News